தெலங்கானாவில் கரோனாவுக்கு இதுவரை 1,527 பேர் பலி

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 518 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
Telangana adds 518 new COVID-19 cases, 3 deaths take toll to 1,527
Telangana adds 518 new COVID-19 cases, 3 deaths take toll to 1,527
Updated on
1 min read

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 518 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில், கடந்த 24 மணி நேர அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது, 

தெலங்கானாவில் இன்றைய நிலவரப்படி 518 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 2.84 லட்சமாக அதிகரித்துள்ளது. 

மேலும், நோய் தொற்றுக்கு புதிதாக மூவர் பலியாகியுள்ளதால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,527 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதித்த 6,839 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இதுவரை 66.55 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து குணமடைந்தோரின் விகிதம் 97.05 ஆக உள்ளது. 

ஒரேநாளில் 44,869 கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com