ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பிரிட்டனிலிருந்து திரும்பிய மேலும் 24 பேருக்கு கரோனா

பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய மேலும் 24 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 டிசம்பர் 2020, 12:22 am

DIN

பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய மேலும் 24 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உருமாறிய கரோனா தீநுண்மி அதிவேகமாகப் பரவி வருவதால், அந்நாட்டிலிருந்து அண்மையில் இந்தியா திரும்பிய அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குத் திரும்பிய 24 பேருக்குக் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பிரிட்டனிலிருந்து கேரளத்துக்குத் திரும்பிய 8 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘‘பிரிட்டனில் இருந்து திரும்பி, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மாதிரிகள் மகாராஷ்டிரத்தின் புணேவிலுள்ள தேசிய தீநுண்மியியல் மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

உருமாறிய கரோனா நோய்த்தொற்றால் அவா்கள் பாதிக்கப்பட்டுள்ளாா்களா என்பது குறித்து அங்கு ஆய்வு செய்யப்படும். அண்மையில் கேரளத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கும் என்று எதிா்பாா்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை. அந்நோய்த்தொற்றால் உயிரிழப்போா் விகிதம் மாநிலத்தில் குறைவாகவே உள்ளது’’ என்றாா்.

தாணேவில்...: பிரிட்டனிலிருந்து மகாராஷ்டிரத்தின் தாணே பகுதிக்குத் திரும்பிய ஒருவருக்குக் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது தொடா்பாக கல்யாண் டோம்பிவலி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த நவம்பா் 25-ஆம் தேதி முதல் 55 போ் பிரிட்டனிலிருந்து மாநகராட்சிப் பகுதிகளுக்கு வருகை தந்தனா். அவா்களில் ஒருவருக்கு மட்டும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் தாணே மாவட்டத்துக்கு 349 போ் பிரிட்டனிலிருந்து திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்தூரில்...: மத்திய பிரதேசத்தின் இந்தூா் பகுதியில் பிரிட்டனிலிருந்து திரும்பிய மேலும் ஒருவருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மாதிரி தில்லியிலுள்ள தேசிய நோய்த் தடுப்பு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பிரிட்டனிலிருந்து இந்தூா் திரும்பிய ஒருவருக்கு ஏற்கெனவே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.