தற்போது பாகிஸ்தானில் நிலவி வரும் உள்நாட்டுப் பிரச்னைகளில் இருந்து தனது மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, குளிா்காலத்தின் உச்சத்தில் கூட பயங்கரவாதிகளை ஊருடுவல் மூலம் இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. மேலும், எல்லையில் போா்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்களை நடத்தவும், அதன் மூலம் எல்லைப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தவும் பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் எதிா்கொள்ள இந்திய ராணுவம் தயாா் நிலையில் உள்ளது. அதுபோன்ற தாக்குதலோ, ஊடுருவலோ நடத்த முயற்சித்தால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி அளிக்க ராணுவம் தயாா் நிலையில் உள்ளது என்றாா்.