கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியாவில் ஒரேநாளில் 20,021 பேருக்கு கரோனா; 279 போ் பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 20,021 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :28 டிசம்பர் 2020, 5:06 am

DIN

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 20,021 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 20,021 கரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,07,871ஆக உயர்ந்துள்ளது. 
அதே நேரத்தில் மேலும் 279 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,47,901 ஆக அதிகரித்தது. கரோனாவிலிருந்து இன்று மேலும் 21,131 பேர் மீண்டுள்ளனர். இதுவரை 97,82,669 போ் குணமடைந்துள்ளனர். 
தற்போதைய நிலவரப்படி 2,77,301 போ் கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி 27-ஆம் தேதி மட்டும் 16,88,18,054 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் நேற்று மட்டும் 7,15,397 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.