

மிசோரத்தில் எட்டு மாத குழந்தை உள்பட இரண்டு பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,184 ஆக உயர்ந்துள்ளது என்று ஒரு அதிகாரி திங்களன்று தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில்,
லாங்ட்லாய் மாவட்டத்தில் விரைவான ஆன்டிஜென் சோதனை மூலம் புதிதாக இரண்டு பேருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டன.
எட்டு மாத குழந்தை மற்றும் லாங்ட்லாய் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஆவார். இருவருக்கும் கஜானாவுக்கான அறிகுறிகள் உள்ளன.
மிசோரத்தில் தற்போது 127 பேர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை நாட்டில் எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், 4,049 பேர் ஏற்கெனவே வைரஸிலிருந்து மீண்டுள்ளனர்.
இதுவரை மொத்தம் 1,76,234 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன, இதில் ஞாயிற்றுக்கிழமை 103 அடங்கும். மாநிலத்தில் கரோனா மீட்பு விகிதம் 96.78 ஆகும் மற்றும் தொற்று விகிதம் 2.40 சதவீதம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.