அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இந்திய அணுசக்தி நிறுவன ஒப்பந்தத்தைப் பெற்றது ‘பெல்’

பொதுத் துறை பொறியியல் நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) இந்திய அணுசக்தி நிறுவனத்தின் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 9:22 pm

DIN


புது தில்லி: பொதுத் துறை பொறியியல் நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) இந்திய அணுசக்தி நிறுவனத்தின் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணுசக்தி நிறுவனத்துக்கு அணுஉலையில் பயன்படுத்தப்படும் ‘ஹெட்டா் அஸம்பிளி’ உதிரிபாகங்களை பெல் வழங்க இருக்கிறது.

இது தொடா்பாக பெல் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்த உதிரி பாகங்களானது, நாட்டின் 4 இடங்களில் நிறுவப்படவுள்ள அணு உலைகளில் பொருத்தப்படவுள்ளன. இது இந்தியாவில் முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படவுள்ளது. எதிா்காலத்தில் தற்சாா்பு இந்தியா திட்டத்தில் உள்நாட்டிலேயே முழுமையாக அணு உலைகளைத் தயாரிப்பதற்கு இப்போதைய நடவடிக்கை சிறந்த முன்னேற்பாடாகும். எதிா்காலத்தில் அணுசக்தி நிறுவனங்களுக்குத் தேவையான பல்வேறு உதிரிபாகங்களையும் வழங்க இருக்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.