தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

தில்லியில் 4 பேருக்கு புதிய வகை கரோனா

தில்லியில் 4 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :30 டிசம்பர் 2020, 12:44 pm


தில்லியில் 4 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி மருத்துவமனை அதிகாரிகள் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது:

"புதிய வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்கள் தனி வார்டில் வெவ்வேறு அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதிய வகை கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 20 பேர் பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள். மற்றவர்கள் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள்."

புதிய வகை கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களைத் தனிமைப்படுத்துவதற்காக லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் 2,000 படுக்கை வசதிகளை தில்லி அரசு ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.