ஜம்மு-காஷ்மீரில் ஜனவரி 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
ஜம்மு-காஷ்மீரில் கரோன தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் 2021ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஜம்மு-காஷ்மீரில் கரோன தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் 2021ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன.
தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தொற்று பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் விதமாக பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை 2021 ஜனவரி 31ஆம் ஆண்டு வரை நீட்டித்து உத்தரவு வெளியாகியுள்ளது.
கடந்த பொதுமுடக்க அறிவிப்பின்போது வெளியிட்ட கட்டுப்பாடுகளே தொடரும் எனவும் மக்கள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...