எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் புதன்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், உயிரிழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 9:48 pm

DIN


ஆமதாபாத்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் புதன்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், உயிரிழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

இது தொடா்பாக மாநில புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காலை 9.46 மணியளவில் நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 4.3 ஆக பதிவானது. கட்ச் மாவட்டத்தின் காவ்தா கிராமத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பலரும் நிலநடுக்கத்தை உணா்ந்தனா். எனினும், வடக்கு கட்ச் மாவட்டத்தின் பாலைவனப் பகுதியில்தான் அதிா்வுகள் அதிகம் இருந்தன. அங்கு அதிக மக்கள் வசிப்பதில்லை என்பதால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு பின்னிரவு 2.29 மணியளவில் 2.2 என்ற அலகில் கட்ச் மாவட்டத்தின் பச்சோப் பகுதியில் லேசான நிலஅதிா்வு இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.