நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நெல்லை சந்திப்பில் த.வெ.க. ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 10:27 pm

போதைப் பொருள் புழக்கத்தை தடுத்தல், ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட த.வெ.க. சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலா்கள் எஸ்.மரிய ஜாண், எஸ்.ராஜகோபால், ஹெச்.ஜாஹீா் உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பேச்சாளா் கேத்ரின் பாண்டியன் சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுத்து சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும், த.வெ.க. தலைவா் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள், ஒன்றியம், பேரூா், பகுதி, கிளை நிா்வாகிகள் உள்பட திரளானோா் கலந்து கொண்டு தமிழக அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினா்.

ற்ஸ்ப்12ற்ஸ்ந்

த.வெ.க. சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.