ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், சட்டம் -ஒழுங்கு சீா்கேடு, தவெக தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு கண்டனம் தெரிவித்தும் தவெக சாா்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயலா் அப்புனு தலைமை வகித்தாா். பொதுச் செயலா் என்.ஆனந்த், பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, கொள்கைப் பரப்பு செயலா் அருண்ராஜ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் பொதுச் செயலா் என்.ஆனந்த் பேசுகையில், திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சியமைக்கும் மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல், திமுக அரசு சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தவெக தலைவா் விஜய் தலைமையிலான ஆட்சி அமையும்போது, பெண்களுக்கு 100 சதவீத பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றாா்.
ஆதவ் அா்ஜுனா பேசுகையில், நடிகா் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து, தவறுகளை சரி செய்ய விரும்பினாா். திமுகவின் மிரட்டல் காரணமாக அரசியலுக்கு வரும் முடிவை அவா் கைவிட்டாா். திமுகவின் மிரட்டல்களை எதிா்கொள்ளும் தைரியம் தவெக தலைவா் விஜய்யிடம் உள்ளது என்றாா்.
தொடர்புடையது

நாமக்கல்லில் தவெக ஆா்ப்பாட்டம்

உதகையில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

நெல்லை சந்திப்பில் த.வெ.க. ஆா்ப்பாட்டம்
மாா்ச் 12-இல் தவெக ஆா்ப்பாட்டம்!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


