தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மேம்படுத்தப்பட்ட ரயில்வே இணையதளம், கைபேசி செயலி: பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் கைபேசி செயலியை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். 

News image

கோப்புப்படம்

Updated On :31 டிசம்பர் 2020, 3:26 pm

மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் கைபேசி செயலியை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். 
நிகழ்ச்சியில் பேசிய அவர் ‘‘நாட்டுக்கு சேவையாற்ற இந்திய ரயில்வே உறுதிபூண்டுள்ளது. ரயில் பயண அனுபவத்தை மேம்படுத்த, தனது சேவைகளை அதிகரிக்க ரயில்வே துறை தொடர்ந்து பணியாற்றி வருகிறது. 
இந்த மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம், முன்பதிவு செய்வதில் பயணிகளுக்கான வசதிகளை அதிகரிக்கும். ‘‘இந்த இணையதளத்தை மேம்படுத்த ஐஆர்சிடிசி தொடர்ந்து பணியாற்றும். டிஜிட்டல் இந்தியா திட்டப்படி, இந்த இணையதளம் தரத்தில் எதற்கும் 
குறைந்தது இல்லை. இது பிரதமரின் தொலைநோக்கு என்று அவர் கூறினார். பிரதமர் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையின்படி, இந்திய ரயில்வே, தனது இ-டிக்கெட் இணையதளம் www.irctc.co.in மற்றும் ஐஆர்சிடிசி ரயில் இணைப்பு கைபேசி செயலி ஆகியவற்றை புதுப்பித்து மேம்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.