கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அஸ்ஸாமில் கடந்த இரு நாட்களாக தீ பிடித்து எரியும் ஆறு!

அஸ்ஸாமில் பூமிக்கடியில் உள்ள எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவினால் அங்குள்ள ஆற்றின் கரையோரப்பகுதி தீப்பிடித்து எரிகிறது. 

News image
Updated On :3 பிப்ரவரி 2020, 11:51 am

DIN

அஸ்ஸாமில் பூமிக்கடியில் உள்ள எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவினால் அங்குள்ள ஆற்றின் கரையோரப்பகுதி தீப்பிடித்து எரிகிறது. 

அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகார் மாவட்டத்தில் உள்ள சஸோனி என்ற கிராமத்தின் அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்து வருகிறது. ஆற்றை ஒட்டியுள்ள எண்ணெய் குழாய் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

பூமிக்கடியில் பதிக்கப்பட்ட ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டு, வெடித்த நிலையில், எண்ணெய் ஆற்றுடன் கலந்து தீ பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

அரசு அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும் அவர்கள் கடந்த இரு தினங்களாக அதிகாரிகள் எந்த நவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.