மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பிகார் தனியார் வங்கியில் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளை

பிகாரில் தனியார் வங்கியில் இருந்து ரூ.15 லட்சம் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

News image
Updated On :19 பிப்ரவரி 2020, 9:42 am

DIN

பிகாரில் தனியார் வங்கியில் இருந்து ரூ.15 லட்சம் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நான்கு பேர் தனியார் வங்கியில் பூட்டை உடைத்து 15 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளதாக அம்மாநில போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சரையா பகுதி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அடையாளம் தெரியாத நால்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளதாக சரையா காவல்துறை அதிகாரி ராஜேஷ் குமார் சர்மா தகவல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.