6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய அமுல்யாவின் வீட்டின் மீது தாக்குதல் 

பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய இளம்பெண்ணின் வீட்டின் மீது மர்மநபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :21 பிப்ரவரி 2020, 9:29 am

DIN

பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய இளம்பெண்ணின் வீட்டின் மீது மர்மநபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின்போது திடீரென மேடை ஏறிய இளம்பெண் அமுல்யா, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பினார். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது. உடனடியாக அமுல்யா மேடையில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார். 

இதையடுத்து அவரை தேசத் துரோக வழக்கில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் அமுல்யாவின் சிக்கமங்களூரு வீட்டின் மீது மர்மநபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் வீட்டின் ஜன்னல் உடைந்தது. மர்மநபர்கள் தாக்குதலைத் தொடர்ந்து அமுல்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகபாப்பு போடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.