காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கருப்பு வெள்ளி: கச்சா எண்ணெய் விலை, கரோனா பரவல்.. பங்குச் சந்தைகளில் கடும் சரிவு

2008 நிதியாண்டுக்குப் பிறகு உலக அளவில் பங்குச் சந்தைகளில் மிக மோசமான சரிவு காணப்பட்ட நாளாக இன்று அறியப்படுகிறது. இன்றைய தினத்தை கருப்பு வெள்ளி என்று இந்திய பங்குச் சந்தை கருதுகிறது.

News image
Updated On :28 பிப்ரவரி 2020, 11:32 am

PTI


மும்பை: 2008 நிதியாண்டுக்குப் பிறகு உலக அளவில் பங்குச் சந்தைகளில் மிக மோசமான சரிவு காணப்பட்ட நாளாக இன்று அறியப்படுகிறது. இன்றைய தினத்தை கருப்பு வெள்ளி என்று இந்திய பங்குச் சந்தை கருதுகிறது.

கரோனா வைரஸ் பரவல்  காரணமாக எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிக மோசமான விளைவுகளை பங்குச் சந்தைகள் சந்தித்துள்ளன.

இன்றைய வர்த்தகத்தின் போது மும்பைப் பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,448 புள்ளிகள் சரிந்து 38,297.29 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவு பெற்றது. மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டில் அடங்கிய 30 நிறுவனங்களின் பங்குகளும் இன்று சரிவையே சந்தித்தன. 

சென்செக்ஸ் குறியீட்டில் டெக் மகிந்திரா, டாடா ஸ்டீல், மகிந்திரா அன்ட் மகிந்திரா, எச்சிஎல், டெக், பஜாஜ் பினான்ஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

Story image

தேசியப் பங்குச் சந்தை குறியீடு நிப்ஃடி 432 புள்ளிகள் சரிந்து 11,202 ஆக இருந்த போது வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசியப் பங்குச் சந்தையில் இடம்பெற்ற 50 நிறுவனப் பங்குகளுமே சரிவைக் கண்டன. 

சீனாவில் எரிபொருள் பயன்பாடு பெருமளவுக்கு குறைந்ததன் காரணமாக, கச்சா எண்ணெய் விலையிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. 

சீனாவைத் தவிர உலக நாடுகளுக்கும் கரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக, முதலீட்டார்களின் மன மாற்றமே உலக அளவில் பங்குச் சந்தைகளில் கடும் சரிவைச் சந்திக்க காரணமாக உள்ளன.

சீனாவில் மட்டும் அல்லாமல் தற்போது தென்கொரியா, ஈரான், இத்தாலி மற்றும் ஜப்பானிலும் வேகமாகப் பரவி வருகிறது. ஜெர்மனி, பிரேசில் நாடுகளிலும் கரோனா பரவிவிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.