உத்தரப்பிரதேசத்தில் மதுரா நெடுஞ்சாலையில் புதன்கிழமை காலை கார் ஒன்றில் இருந்து மூன்று பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தததாகத் போலீஸார் தெரிவிக்கின்றனர். இறந்தவர்கள் நீரஜ் அகர்வால், நேஹா அகர்வால், தன்யா அகர்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் படுகாயமடைந்த நிலையில் சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான்.
கார் விபத்து ஏற்பட்டுள்ளதா? அல்லது பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.