மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பொற்கோவில் படத்துடன் கால்மிதியடி விற்பனை: அமேஸானுக்கு எதிராக வழக்கு

சீக்கிய மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பொற்கோவில் படம் பொறிக்கப்பட்ட கால்மிதியடிகளை விற்பனை செய்த அமேஸானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2020, 10:57 am


புது தில்லி: சீக்கிய மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பொற்கோவில் படம் பொறிக்கப்பட்ட கால்மிதியடிகளை விற்பனை செய்த அமேஸானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீக்கிய சமுதாய மக்களின் மனதைப் புண்படுத்தியதாக அமேஸான் மீது தில்லி சிக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் தலைவர் மஞ்ஜிந்தர் சிங் சிர்ஸா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Story image

அந்தப் புகாரில், உடனடியாக பொற்கோவில் படத்துடன், கழிவறைகளில் பயன்படுத்தும் கால்மிதியடிகளின் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், இது குறித்து அமேஸான் மன்னிப்புக் கேட்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேப்போல ஏற்கனவே 2018ம் ஆண்டு பொற்கோவில் புகைப்படம் இடம்பெற்ற கால்மிதியடிகளை அமேஸான் விற்பனைக்குக் கொண்டு வந்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.