இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிஏஏ குறித்து விவாதிக்கத் தயார்: அமித் ஷா சவாலை ஏற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து விவாதிக்கத் தயார் என அமித் ஷா விடுத்த சவாலுக்கு மாயாவதி பதிலளித்துள்ளார்.

News image
Updated On :22 ஜனவரி 2020, 1:36 pm

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து விவாதிக்கத் தயார் என அமித் ஷா விடுத்த சவாலுக்கு மாயாவதி பதிலளித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றுப் பேசுகையில், சிஏஏ குறித்து பொதுவெளியில் என்னுடன் விவாதிக்கத் தயாரா? என எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சவால் விடுத்தார். அப்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரின் பெயர்களை அமித் ஷா குறிப்பிட்டார்.

இந்நிலையில், சிஏஏ குறித்து விவாதிக்கத் தயார் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிடுகையில்,

"சர்ச்சைக்குரிய சிஏஏ/தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி)/தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்பிஆர்) விவகாரங்களில் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களால் அரசு பாதிக்கப்பட்டுள்ளது. சிஏஏ குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகளுக்கு அரசு சவால் விடுத்துள்ளது. இந்த சவாலை ஏற்று எந்தவொரு இடத்தில் வேண்டுமானாலும் விவாதிக்க பகுஜன் சமாஜ் கட்சி தயார்" என்று குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல், அமித் ஷா குறிப்பிட்டவர்களுள் மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரான சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ்வும் இந்த சவாலை ஏற்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விவாதத்துக்கான தலைப்பில் அவர் மாற்றம் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ்,

"விவாதத்துக்கான இடம் மற்றும் நேரத்தை பாஜக முடிவு செய்யட்டும். நான் அங்கு செல்வேன். ஆனால் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டவையே விவாதத்தின் தலைப்பாக இருக்க வேண்டும்" என்றார்.

முன்னதாக, அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைஸி செவ்வாய்கிழமை இரவு தெரிவிக்கையில்,

"நான் இங்கு இருக்கிறேன். எதற்காக அவர்களுடன் விவாதம், என்னுடன் விவாதியுங்கள். தாடி வைத்த மனிதருடன் விவாதியுங்கள். சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி குறித்து நாம் பேசி விவாதம் செய்வோம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.