பனிமூட்டம் காரணமாக தில்லி செல்லும் 21 ரயில்கள் தாமதமாகின
வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான மூடுபனி காரணமாக தில்லிக்கு புறப்படும் 21 ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான மூடுபனி காரணமாக தில்லிக்கு புறப்படும் 21 ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, பூரி-புது தில்லி பூரிஷோத்தம் எக்ஸ்பிரஸ் மற்றும் ஆனந்த் விஹார் சத்பவானா எக்ஸ்பிரஸ் ஆகியவை 6 மணி நேரம் தாமதமாக வந்தன, அதன்பிறகு வாரணாசி-புது தில்லி காஷி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் 3 மணி 30 நிமிடங்கள் தாமதமாக வந்தது.
கயா-புது தில்லி மகாபோதி எக்ஸ்பிரஸ் மற்றும் அலகாபாத்-புது தில்லி பத்மாவத் எக்ஸ்பிரஸ் 2 மணி 30 நிமிடங்கள் தாமதமாக வந்தன. அகமதாபாத்-புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ், ஹவுரா-புது தில்லி பூர்வா எக்ஸ்பிரஸ், அகமதாபாத்-டெல்லி ஆசிரம எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டினம்-புது தில்லி ஏபி எக்ஸ்பிரஸ் பல மணி நேரம் தாமதமானது.
வெள்ளிக்கிழமை, வட இந்தியாவின் பல பகுதிகளில் மூடுபனி காரணமாக 12 ரயில்கள் தாமதமாக வந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...