கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தில்லி வானிலை: அடுத்த வாரம் மழைக்கு வாய்ப்பு

தேசிய தலைநகரில் சனிக்கிழமை அன்று வெயில் நாளாக அமைந்தது.  பனி குறைந்து,

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2020, 5:38 am

IANS

தேசிய தலைநகரில் சனிக்கிழமை அன்று வெயில் நாளாக அமைந்தது.  பனி குறைந்து, 5 டிகிரிக்கு கீழ் வந்தது. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வானம் மழைமூட்டத்துடன் லேசான மழையுடன் இருக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை முதல் லேசான காற்று வீசுவதால் காற்றின் தரம் 'மிகவும் மோசமானது' என்பதிலிருந்து 'மோசம்' எனும் வகைக்குள் வந்து சற்று மேம்பட்டது.

குறைந்தபட்ச வெப்பநிலை 4.8 டிகிரி செல்சியஷாக பதிவாகியுள்ளது, அதிகபட்சம் 21 டிகிரி வரை வர வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் காரணமாக குறைந்தது 21 ரயில்கள் தாமதமாக வந்தன.

மையம் நடத்திய காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு (சஃபர்) அறிக்கையின்படி, தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) 208 இல் 'மோசம்'அதாவது 208 ஆகவும், பிம் எம்10 உடன் 118 ஆகவும், பி எம் 2.5 63 ஆகவும் இருந்தது. பின்னர் தில்லியில் உள்ள ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் அறிக்கையின் படி மேலும் முன்னேற்றம் இருப்பதாக சஃபர் கூறியது.

ஆனால் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை மோசமடைய வாய்ப்புள்ளது என்று கூறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.