இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிஏஏ உள்நாட்டு விவகாரம்: வெங்கய்ய நாயுடு

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இடமளிக்கவில்லை என வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :27 ஜனவரி 2020, 12:08 pm


இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இடமளிக்கவில்லை என வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். 

புதுதில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிறகு பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இந்திய நாடாளுமன்றம் மற்றும் இந்திய அரசின் வரம்புக்குட்பட்ட விவகாரங்களில் வெளிநாட்டு அமைப்புகள் தலையிடுவது கவலையளிக்கிறது என்றார். மேலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மற்ற நாடுகளுக்கு எந்த வாய்ப்பும் இடமளிக்கவில்லை என்று கூறிய அவர், இது போன்ற கருத்துகளை வெளியிடுவதை அவர்கள் எதிர்காலங்களில் தவிர்ப்பார்கள் என்பதை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்நிலையில், இந்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் 6 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்தத் தீர்மானங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விவாதம் நடத்தவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.