புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கடும் மூடுபனி காரணமாக தில்லியில் 20 ரயில்கள் தாமதம்

வட இந்தியாவின் பல பகுதிகளில் மூடுபனி நிலை தொடர்ந்து வரும் நிலையில், தில்லிக்கு புறப்படும் 20 ரயில்கள் தாமதமாக புறப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
Updated On :30 ஜனவரி 2020, 5:18 am

DIN

வட இந்தியாவின் பல பகுதிகளில் மூடுபனி நிலை தொடர்ந்து வரும் நிலையில், தில்லிக்கு புறப்படும் 20 ரயில்கள் தாமதமாக புறப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

தலைநகா் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுங் குளிா், மூடுபனி தொடர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்களின் சேவை தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 

இன்றும் தில்லியில் இருந்து 20 ரயில்கள் தாமதமாக புறப்பட்டுள்ளன. வடக்கு ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, திப்ருகார்-தில்லி பிரம்மபுத்ரா மெயில் ரயில் மூன்று மணி நேரம் தாமதமானது. அதன்பிறகு கயா-புது தில்லி மகாபோதி எக்ஸ்பிரஸ் இரண்டரை மணி நேரங்கள் தாமதமானது. 

புரி-புது தில்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், அசாம்கர்-தில்லி கஃபியத் எக்ஸ்பிரஸ், ஹவுரா-புது தில்லி பூர்வா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமானது.

கான்பூர்-புது தில்லி ஷ்ரம் சக்தி எக்ஸ்பிரஸ், புவனேஷ்வர்-புது தில்லி டொரான்டோ எக்ஸ்பிரஸ் மற்றும் ரேவா-ஆனந்த் விஹார் ரேவா எக்ஸ்பிரஸ் ஆகியவை ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக வந்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.