அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

போலி கரோனா பரிசோதனை சான்றிதழ் மூலமாக பயணம்: தில்லி தம்பதி மீது வழக்குப்பதிவு

கரோனா வைரஸ் பரிசோதனை குறித்த போலிச் சான்றிதழை வழங்கிய தம்பதியினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :9 ஜூலை 2020, 12:43 pm

DIN

கரோனா வைரஸ் பரிசோதனை குறித்த போலிச் சான்றிதழை வழங்கிய தம்பதியினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தில்லியைச் சேர்ந்த தம்பதி, ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். வழியில் காவல்துறையினர் நிறுத்தவே, தங்களிடம் உள்ள கரோனா பரிசோதனை சான்றிதழை வழங்கியுள்ளனர். 

பிரபல ஆர்.எம்.எல் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் தங்கள்இருவருக்கும்  கரோனா தொற்று இல்லை என்றும் கூறினர். சான்றிதழும் மருத்துவமனையின் பெயரில் இருந்தது. 

சான்றிதழ் குறித்து சந்தேகித்த காங்க்ரா மாவட்ட எஸ்.பி. சம்மந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரித்தபோது அது போலி எனத் தெரிய வந்தது. 

இதை அடுத்து கணவன், மனைவி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.