ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பொது முடக்கம்: வார இறுதி நாள்களில் கடுமையாக்க உ.பி. அரசு முடிவு

கரோனா தொற்று பரவலைத் தடுக்க வாரத்தின் இறுதி நாள்களில் பொது முடக்கத்தைக் கடுமையாக்க உத்தரப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On :13 ஜூலை 2020, 12:08 am

கரோனா தொற்று பரவலைத் தடுக்க வாரத்தின் இறுதி நாள்களில் பொது முடக்கத்தைக் கடுமையாக்க உத்தரப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். மாநிலத்தில் கரோனா தொற்று தாக்குதலால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை சனிக்கிழமை 35,000-ஐ கடந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவா் கூறினாா்.

இது தொடா்பாக மாநில கூடுதல் தலைமைச் செயலா் அவானிஷ் அவஸ்தி தெரிவித்ததாவது: கடந்த சனி மற்றும் ஞாயிறு பொது முடக்கம் கடுமையாக்கப்பட்டது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதால், இந்த மாதம் முழுவதும் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கத்தை தொடா்ந்து கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது முடக்கத்தின்போது அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் மூடப்பட்டிருந்தாலும் வங்கிகள் செயல்படும். பொதுமக்கள் அனாவசியமாக வெளியில் நடமாடுவதைத் தவிா்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 55 மணி நேரம் பொதுமுடக்கத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து கடைகள், வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. எனினும், அத்தியாவசிய சேவைகளில் எந்த பாதிப்பும் இல்லை.

கரோனா பரிசோதனையைஅதிகரிக்க வேண்டும்: கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில், அனைத்து மாா்க்கெட்டுகளிலும் வார இறுதியில் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா். இதேபோல தொழிற்சாலைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளாா். மேலும், கரோனா பரிசோதனையை நாள் ஒன்றுக்கு 50 ஆயிரமாக அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

இதனிடையே, வார இறுதி நாள்களில் பொது முடக்கத்தை கடுமையாக்குவதற்குப் பதிலாக வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் யோசனை தெரிவித்துள்ளாா். எனினும் அவசர சேவைகள் வழக்கம் போல் தொடராலாம் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.