இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சுந்தர் பிச்சையுடனான உரையாடல் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது: பிரதமர் மோடி

கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடனான உரையாடல் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

News image
பிரதமர் மோடி | சுந்தர் பிச்சை
Updated On :13 ஜூலை 2020, 9:30 am

DIN

கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடனான உரையாடல் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியுடன் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை காணொலி மூலமாக இன்று கலந்துரையாடினார். 

இந்த உரையாடலுக்குப் பின்னர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 

இன்று காலை மிகவும் பயனுள்ள ஒரு உரையாடல் சுந்தர் பிச்சையுடன் நிகழ்ந்தது. நாங்கள் பல விஷயங்கள் பற்றி பேசினோம். குறிப்பாக நாட்டில் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்றுவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினோம். 

கரோனா பொதுமுடக்க காலத்தில் உருவாகி வரும் புதிய பணி கலாசாரம் பற்றி நான் பேசினேன். கரோனா தொற்றுநோயால் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். மேலும், தரவு பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் பேசினோம்.

டிஜிட்டல் துறைகளில் கூகுளின் பங்கு குறித்து கேட்டறிந்தேன். குறிப்பாக கல்வி, கற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூகுளின் முக்கியத்துவம் குறித்து தெரிந்தது கொண்டேன்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.