ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்த வாரத்தில் கரோனா பாதிப்பு 10 லட்சத்தை எட்டிவிடும்: ராகுல் காந்தி

இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை இந்த வாரத்தில் 10 லட்சத்தைக் கடந்துவிடும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

News image
இந்த வாரத்தில் கரோனா பாதிப்பு 10 லட்சத்தை எட்டிவிடும்: ராகுல் காந்தி
Updated On :14 ஜூலை 2020, 7:00 am

PTI

புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை இந்த வாரத்தில் 10 லட்சத்தைக் கடந்துவிடும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

தனது சுட்டுரையில் ராகுல் கூறியிருப்பதாவது, இந்த வாரம் இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுட்டுரையுடன், உலகில் கரோனா தொற்றுப் பரவலை மிகவும் கவனத்துடன் கையாளவில்லை என்றால், தற்போதிருக்கும் மோசமான நிலையில் இருந்து மிக மோசமான நிலையை அடைந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கும் செய்தியையும் ராகுல் காந்தி இணைத்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இந்தியாவில் ஒரே நாளில் 28,498 பேருக்கு கரோனா பாதித்ததை அடுத்து, மொத்த பாதிப்பு 9 லட்சத்தை எட்டியது. நாட்டில் கரோனா பாதிப்பு 8 லட்சத்தைத் தொட்டு வெறும் மூன்று நாள்களில் 9 லட்சத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.