லடாக் பகுதியில் பாதுகாப்பு சூழலை நேரில் ஆய்வு செய்ய வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லைப் பிரச்னை குறித்து தீர்வு காண சீனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போதைய நிலையில், எதையும் உறுதியாகக் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சிறு நிலப்பரப்பைக் கூட இந்தியாவிடம் இருந்து பறிக்கும் சக்தி இந்த உலகிலேயே இல்லை என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையை தீர்க்க இரு தருப்பிலும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையின் பயனாக தீர்வு காணப்படும் என்பதை என்னால் அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால் நான் ஒன்றை உறுதி அளிக்கிறேன், நமது நிலப்பரப்பில் ஒரு சிறு பகுதியைக் கூட பறித்துச் செல்லும் சக்தி இந்த உலகிலேயே இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டால் அதை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


