ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இதே நிலைமை நீடித்தால் ஆகஸ்ட் 10-க்குள் கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டும்: ராகுல் எச்சரிக்கை

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

News image
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
Updated On :17 ஜூலை 2020, 7:00 am

DIN

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது 10 லட்சத்தைக் கடந்துள்ளது. இதே நிலைமை நீடித்தால் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் பாதிப்பு 20 லட்சத்தை எட்டும். 

எனவே, தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

அதேபோன்று, இந்த வாரம் கரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடக்கும் என சில நாள்களுக்கு முன்னதாகத் தான் இட்ட பதிவையும் அவர் ரீ-ட்வீட் செய்துள்ளார். 

அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.