பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்ய லடாக் சென்றார் ராஜ்நாத் சிங்
இந்தியா - சீனா இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு, பேச்சுவார்த்தையின் பயனாக படைகள் திரும்பப் பெறப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு சூழலை நேரில் ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் சென்றுள்ளார்.









