மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வியாழக்கிழமை கனமழை பெய்ததை அடுத்து, குடியிருப்புக் கட்டடம் சரிந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு மும்பையின் ஃபோா்ட் பகுதியில் உள்ள 6 அடுக்கு பழைய கட்டடம் ஒன்று நேற்று சரிந்து விழுந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை படை தெரிவித்துள்ளது.
நேற்று மற்றொரு பகுதியிலும் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மும்பையின் புகா்ப் பகுதியான மால்வானியில் மூன்றடுக்கு கட்டடம் கன மழை காரணமாக சரிந்தது. தீயணைப்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டு, இடிபாடுகளில் இருந்து 15 பேரை காயங்களுடன் மீட்டனா். அதில் இருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். 13 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


