மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விகாஸ் துபே என்கவுண்டரை போலி என்று சொல்ல முடியாது: உச்ச நீதிமன்றத்தில் உ.பி. காவல்துறை

ரௌடி விகாஸ் துபே என்கவுண்டரை போலி என்று சொல்ல முடியாது என உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2020, 1:17 pm

ANI


புது தில்லி: ரௌடி விகாஸ் துபே என்கவுண்டரை போலி என்று சொல்ல முடியாது என உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது உத்தரப்பிரதேச காவல்துறை இன்று விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அந்த பதில் அறிக்கையில், என்கவுண்டர் நடந்தது மிகச் சரியானதே. மற்றும் வேறு வழியில்லாமல் நடத்தப்பட்டது, அதை போலி என்கவுண்டர் என்று சொல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.