இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உத்தரப்பிரதேசத்தில் ஊழல் உச்சம் : பாஜக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேசத்தில் ஊழல் உச்சமடைந்திருப்பதாக பாஜக எம்.எல்.ஏ குற்றம் சாட்டியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
corruption rampant in up says bjp mla
Updated On :21 ஜூலை 2020, 12:08 pm

DIN

உத்தரப்பிரதேசத்தில் ஊழல் உச்சமடைந்திருப்பதாக பாஜக எம்.எல்.ஏ குற்றம் சாட்டியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபாமாவ் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த ஷ்யாம் பிரகாஷ். இவர் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி செய்து வரும் அரசு மீது, சொந்த கட்சி எம்.எல்.ஏ ஊழல் புகார் தெரிவித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ”எனது இவ்வளவு நாள் அரசியல் வாழ்வில் இப்படி ஒரு ஊழலை நான் பார்த்ததில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ,”உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் ஊழல் குறித்து உயர் அதிகாரிகளிடம் யார் புகார் செய்தாலும், மற்றவர் அதில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்.” என குற்றம் சாட்டியுள்ளார்.

எம்.எல்.ஏ ஷ்யாம் பிரகாஷின் இந்த குற்றச்சாட்டு பாஜக கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ பிரகாஷ்,முதல்வர் யோகி அரசின் மீது சட்டமன்ற நிதி கையாடல் குறித்து புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.