அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தில்லியில் கரோனா பாதிப்பு குறித்து ஆகஸ்ட் 1 -  5 வரை மீண்டும் ஆய்வு

தில்லியில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அறிய, வரும் ஆகஸ்ட் 1 - 5-ம் தேதி மீண்டும் புதிதாக ஆய்வு நடத்தப்படும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்
Updated On :22 ஜூலை 2020, 11:01 am

PTI


புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அறிய, வரும் ஆகஸ்ட் 1 - 5-ம் தேதி மீண்டும் புதிதாக ஆய்வு நடத்தப்படும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாதந்தோறும் இந்த ஆய்வை (செரோ ஆய்வு) நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த ஆய்வை தில்லி அரசு, தேசிய நோய் தடுப்பு மையம் ஆகியவை இணைந்து மேற்கொண்டன. கடந்த ஜூன் 27-ஆம் தேதி முதல், ஜூலை 10-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில்: தில்லியில் உள்ள 11 மாவட்டங்களில், மொத்தம் 21,387 பேருக்கு தொற்று மாதிரிகள் பெறப்பட்டு அதில், ஆன்டி பாடி எந்த அளவிற்கு இருக்கின்றன என பரிசோதிக்கப்பட்டது. இதன்படி, தில்லியில் 23.48 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், இவா்களில் பெரும்பாலானவா்களுக்கு கரோனா அறிகுறிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் ஆய்வில், இதைவிட அதிக மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்.

இதைத் தவிர, பிளாஸ்மாவை விற்கவோ, வாங்கவோ முயல்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் எச்சரித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.