தின்சுகியா: அசாம் மாநிலம் பக்ஜன் பகுதியில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் 5வது எண்ணெய் கிணற்றுக்கு அருகே வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில் அங்கே இருந்த 3 வெளிநாட்டு நிபுணர்கள் காயமடைந்தனர்.
தின்சுகியா மாவட்டம், பக்ஜன் பகுதியில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய் கிணற்றுக்கு அருகே வெடிவிபத்து நேரிட்டது. வெடிவிபத்து நிகழ்ந்த போது அந்தப் பகுதியில் இருந்து வெளிநாட்டு நிபுணர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று ஆயில் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டிரிதிப் ஹஸாரிகா கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த மே 27-ம் தேதி பக்ஜன் பகுதியில் இருந்த எண்ணெய் கிணற்றில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு, எரிவாயு தயாரிப்புப் பணி நடந்து கொண்டிருந்த போது திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. பிறகு இதே கிணற்றில் ஜூன் 9-ம் தேதி தீ விபத்து நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


