சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அசாமில் ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய் கிணற்றில் வெடிவிபத்து: 3 பேர் காயம்

அசாம் மாநிலம் பக்ஜன் பகுதியில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் 5வது எண்ணெய் கிணற்றுக்கு அருகே வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில் அங்கே இருந்த 3 வெளிநாட்டு நிபுணர்கள் காயமடைந்தனர்.

News image
அசாமில் ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய் கிணற்றில் வெடிவிபத்து: 3 பேர் காயம்
Updated On :22 ஜூலை 2020, 11:25 am

ANI


தின்சுகியா: அசாம் மாநிலம் பக்ஜன் பகுதியில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் 5வது எண்ணெய் கிணற்றுக்கு அருகே வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில் அங்கே இருந்த 3 வெளிநாட்டு நிபுணர்கள் காயமடைந்தனர்.

தின்சுகியா மாவட்டம், பக்ஜன் பகுதியில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய் கிணற்றுக்கு அருகே வெடிவிபத்து நேரிட்டது. வெடிவிபத்து நிகழ்ந்த போது அந்தப் பகுதியில் இருந்து வெளிநாட்டு நிபுணர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று ஆயில் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டிரிதிப் ஹஸாரிகா கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த மே 27-ம் தேதி பக்ஜன் பகுதியில் இருந்த எண்ணெய் கிணற்றில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு, எரிவாயு தயாரிப்புப் பணி நடந்து கொண்டிருந்த போது திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. பிறகு இதே கிணற்றில் ஜூன் 9-ம் தேதி தீ விபத்து நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.