கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஜம்மு - காஷ்மீரில் கார் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி; 4 பேர் மாயம்

ஜம்மு காஷ்மீரில் கார் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:59 pm

DIN

ஜம்மு - காஷ்மீரில் கார் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். 

ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த மோகன் லால் என்பவர் தனது குடும்பத்துடன் செவ்வாய்கிழமை காரில் செனானியை நோக்கி சென்றிருக்கிறார். ஆனால் அவரது தொலைபேசியை இரவு 8.45 மணிக்கு மேல் தொடர்புகொள்ள முடியவில்லை. இதுதொடர்பாக அவர்களது குடும்பத்தினர் ராம் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். 

இதனிடையே ககோட் நுல்லா அருகே ஆற்றில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் மாயமான 4 பேரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பலத்த மழை காரணமாக ஆற்றில் 20 அடிக்கு மேல் நீரோட்டம் இருந்ததால் தேடும் பணியில் கடினம் ஏற்பட்டுள்ளதாக ராம் நகர் காவல் நிலைய அதிகாரி பரத்வாஜ் தெரிவித்துள்ளார். 

எனினும் அவர்களது கார் மீட்கப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.