தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு டீக்கடைக்காரருக்கு வந்த நோட்டீஸ்

ஹரியாணா மாநிலத் தலைநகர் சண்டிகரில், டீக்கடைக்காரருக்கு ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு வங்கியில் இருந்து வந்த நோட்டீஸ் வெறும் அதிர்ச்சியை மட்டும் அளித்தது என்று சொன்னால் சரியாக இருக்காது.

News image
ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு டீக்கடைக் காரருக்கு வந்த நோட்டீஸ்
Updated On :23 ஜூலை 2020, 6:50 am

ANI


சண்டிகர்: ஹரியாணா மாநிலத் தலைநகர் சண்டிகரில், டீக்கடைக்காரருக்கு ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு வங்கியில் இருந்து வந்த நோட்டீஸ் வெறும் அதிர்ச்சியை மட்டும் அளித்தது என்று சொன்னால் சரியாக இருக்காது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கின. பெரிய தொழில்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரை பாதிப்பு பாதிப்புதான்.

ஏற்கனவே தொழில் முடங்கி வாழ்வாதாரம் தொலைந்து போயிருந்த குருக்ஷேத்ராவைச் சேர்ந்த டீக்கடைக்காரருக்கு வங்கியில் இருந்து வந்த நோட்டீஸ் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராஜ்குமார், சாலையோரம் டீக்கடை நடத்தி வருகிறார். தனது மோசமான பொருளாதார நிலையை சமாளிக்க ஒரு வங்கியில் கடன் கேட்டு ராஜ்குமார் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவர் கேட்ட சொற்ப கடன் தொகையை தர முடியாது என்று மறுத்த வங்கி நிர்வாகம் அதற்கு சொன்ன காரணம்தான் ராஜ்குமாரை கலங்க வைத்துள்ளது.

ஏற்கனவே வங்கியில் வாங்கிய ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், அதனை திருப்பிச் செலுத்தாததால் புதிதாகக் கடன் வழங்க முடியாது என்றும் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு டீக்கடைக்காரருக்கு எப்படி வங்கியில் இருந்து ரூ.50 கோடி கடன் கொடுத்திருக்க முடியும் என்று அனைவதும் கேட்கிறார்கள். 

வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பலரும் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், இவ்வாறு வாங்காத ரூ.50 கோடி கடனை என்ன செய்யப் போகிறோம் என்று தவித்து வருகிறார் ராஜ்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.