ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கரோனா, பொருளாதார நிலையைத் தொடர்ந்து சீன விவகாரத்திலும் எச்சரிக்கிறேன்: ராகுல் காந்தி ட்வீட்

கரோனா பரவல் மற்றும் இந்தியப் பொருளாதாரம் குறித்து தான் தொடர்ந்து எச்சரித்து வந்ததை மத்திய அரசு கேட்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

News image
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
Updated On :24 ஜூலை 2020, 9:25 am

DIN

கரோனா பரவல் மற்றும் இந்தியப் பொருளாதாரம் குறித்து தான் தொடர்ந்து எச்சரித்து வந்ததை மத்திய அரசு கேட்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து அரசுக்கு சுட்டிக்காட்டி வருகிறார். 

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், இந்தியப் பொருளாதாரம், சீன எல்லைப் பிரச்னை உள்ளிட்டவை குறித்து தனது கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், 

கரோனா குறித்தும், இந்தியப் பொருளாதாரம் குறித்தும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன்; ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை. இதனால் பேரழிவு ஏற்பட்டது.

தற்போது சீன எல்லைப் பிரச்னை குறித்தும் எச்சரித்து வருகிறேன். ஆனால், அதையும் அவர்கள் கேட்க மறுக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.