மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நாடு முழுவதும் ஒரே நாளில் 4 லட்சம் கரோனா பரிசோதனைகள்

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

News image
4 லட்சத்தைத் தாண்டிய கரோனா பரிசோதனைகள்
Updated On :25 ஜூலை 2020, 6:25 am

DIN

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 3.5 லட்சம் வரை நடைபெற்று வந்த கரோனா வைரஸ் பரிசோதனைகள் நேற்று 4 லட்சத்தை கடந்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

இதுவரை இந்தியாவில் மொத்தம் 1,58,49,068 பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், நேற்றும் மட்டும் ஒரே நாளில் 4,20,898 சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பிலிருந்து 8,49,431 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 31358 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.