ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின், ஸ்ரீ நகர் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத தீவிரவாதி இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


ஜம்மு-காஷ்மீரின், ஸ்ரீ நகர் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத தீவிரவாதி இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ரன்பீர்கர் பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தீவிரவாதி இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...