மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஆம்புலன்ஸ் கிடைக்காமல் பலியான கரோனா நோயாளி: பெங்களூருவில் அதிர்ச்சி

பெங்களூருவில்  பல மணிநேரம் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் கரோனா நோயாளி  வீட்டில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
பலியான கரோனா நோயாளி
Updated On :27 ஜூலை 2020, 6:31 am

DIN

பெங்களூருவில்  பல மணிநேரம் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் கரோனா நோயாளி  வீட்டில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு நகரில் பொம்மனஹள்ளி என்ற பகுதியை சேர்ந்த நபர் கரோனா வைரஸ்  இருப்பதாக சந்தேகித்து  கரோனா பரிசோதனை செய்து கொண்டார். இந்நிலையில் கரோனா பாதிப்பு அவருக்கு இருப்பதாக பெங்களூரு மாநகராட்சியால் தொடர்பு கொண்டு உறுதி செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் அவருக்கு திடீரென்று சுவாசக் கோளாறு பிரச்சனை ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் 108 மூலமாக ஆம்புலன்ஸ் பெற முயற்சித்தனர். பல மணி நேரமாக முயற்சி செய்தும் அவருக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் இரவு சுமார் 9 மணியளவில்  வீட்டில் உயிரிழந்தார்.

பெங்களூரு நகரில் ஆம்புலன்ஸ் குறைபாடு காரணமாக பலர் அவதிப்பட்டு வருவதாக ஏற்கெனவே புகார் எழுந்துள்ள வந்த நிலையில் தற்பொழுது கரோனா நோயாளி ஒருவர் பல மணிநேரமாக ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காமல் வீட்டிலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.