தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உயிருக்குப் போராடியவருக்கு காணொலி வழியாக சிகிச்சை அளித்து உயிரைக் காத்த தில்லி மருத்துவர்

கல்லீரல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நலன் மோசமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தில்லி மருத்துவர், காணொலி காட்சி வாயிலாக சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

News image
உயிருக்குப் போராடியவருக்கு காணொலி வழியாக சிகிச்சை அளித்து உயிரைக் காத்த தில்லி மருத்துவர்
Updated On :30 ஜூலை 2020, 12:37 pm

ANI


புது தில்லி: கல்லீரல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நலன் மோசமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தில்லி மருத்துவர், காணொலி காட்சி வாயிலாக சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு மருந்தாளுநர் ஒருவர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தனது நண்பர் கல்லீரல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை கடுமையாக மோசமடைந்திருப்பதாகவும், மூச்சு விட சிரமப்படுவதாகவும் கூறியுள்ளார்.

உடனடியாக அவருக்கு மருத்துவர் உஷத் திர், உதவ முன் வந்தார். கணொலி வாயிலாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், நோயாளி இருந்த இடத்தில் செல்லிடப்பேசி சிக்னல் கிடைக்காததால், நோயாளியை ஒரு சிறிய படகில் ஏற்றினர். படகில் இருந்தபடி, காணொலி காட்சி வாயிலாக மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். நல்ல வேளையாக, மருந்தாளுநர், மருத்துவர் கொடுத்த மருந்துகளை நன்கு புரிந்து கொண்டு, ஊசி செலுத்தவும் தெரிந்திருந்ததால், உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடனடியாக அவரது உடல்நிலை சீரடைந்ததும், ஒரு ஆண்டுக்கு அவரது உடலை சீராக வைத்திருக்க உதவும் மருத்துவ உபகரணங்களயும் சர் கங்கா ராம் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது.

தற்போது பொதுமுடக்கம் தளர்வு அறிவிக்கப்பட்டதும், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பணம் செலுத்தி போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நோயாளியை தில்லி அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் திர் கூறியுள்ளார்.

நோயாளியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவரது நண்பர் ரெஹ்மான் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.