நாட்டின் தலைநகர் புதுதில்லியில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1195 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதுதில்லியில் 27 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை தற்போதைய நிலவரப்படி 10 ஆயிரத்து 705 பேர் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 930 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
புதுதில்லியில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி இதுவரை 3 ஆயிரத்து 963 பேர் கரோனா பாதிப்பால் பலியாகி உள்ளனர் அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றனர்.