புதுதில்லியில் மேலும் 1195 பேருக்கு கரோனா பாதிப்பு
நாட்டின் தலைநகர் புதுதில்லியில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1195 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாட்டின் தலைநகர் புதுதில்லியில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1195 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதுதில்லியில் 27 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை தற்போதைய நிலவரப்படி 10 ஆயிரத்து 705 பேர் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 930 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
புதுதில்லியில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி இதுவரை 3 ஆயிரத்து 963 பேர் கரோனா பாதிப்பால் பலியாகி உள்ளனர் அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...