மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தெலங்கானாவில் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 1986 பேர் பாதிப்பு

தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1986 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
தெலுங்கானாவில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு
Updated On :31 ஜூலை 2020, 8:10 am

DIN

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1986 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 1,986 பேர் காரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் காரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 703 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 10 ஆயிரத்து 632 பேர் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் ஒரே நாளில் 816 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மாநிலத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 519 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 380 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 37 ஆயிரத்து 582 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.