மகாராஷ்டிரத்தில் மேலும் 93 காவலர்களுக்கு கரோனா தொற்று
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு கரோனா தடுப்புப் பணியில் இருக்கும் காவலர்களும் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93 காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர காவல் துறை தெரிவித்துள்ளது. இதில் 8 பேர் காவல் அலுவலர்கள்.
இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 2,509 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 27 காவலர்கள் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 67,655 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...