அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

உ.பி.யில் கரோனாவால் பாதிப்புக்குள்ளான 27 சதவீதத்தினர் புலம்பெயர் தொழிலாளர்கள்

​உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிப்புக்குள்ளானோரில் 27 சதவீதத்தினர் மாநிலம் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2020, 11:26 am

DIN


உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிப்புக்குள்ளானோரில் 27 சதவீதத்தினர் மாநிலம் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மார்ச் 1-ஆம் தேதி முதல் இன்றைய தேதி வரை சுமார் 30 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசம் திரும்பியுள்ளனர்.

அந்த மாநிலத்தில் கரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,105. இதில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,165. கரோனா நோய்த் தொற்றுக்கான அந்த மாநில சிறப்பு அலுவலர் தெரிவிக்கையில், "இதுவரை 69,000 புலம்பெயர் தொழிலாளர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதில் ஞாயிற்றுக்கிழமை வரை 2,165 தொழிலாளர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.