ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

ஒரு வாரத்துக்கு தில்லியின் அனைத்து எல்லைகளும் மூடல்: அரவிந்த் கேஜரிவால்

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு வாரத்துக்கு தில்லியின் அனைத்து எல்லைகளும் மூடி சீல் வைக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 ஜூன் 2020, 7:35 am


புது தில்லி: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு வாரத்துக்கு தில்லியின் அனைத்து எல்லைகளும் மூடி சீல் வைக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் தொடர்ந்து கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இன்று காணொலி மூலம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இந்த அறிவிப்பை மேற்கொண்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, தில்லியின் அனைத்து எல்லைப் பகுதிகளும் அடுத்த ஒரு வாரத்துக்கு மூடி சீல் வைக்கப்படும். அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

அதேபோல, அரசு அலுவலர்கள் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து பயணத்தை மேற்கொள்ளலாம். பாஸ் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். 

ஒரு வாரம் கழித்து எல்லையைத் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசனை நடத்தி, பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு முடிவு செய்யப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.