ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாநில அரசுகளால் இதுவரை 256 தொழிலாளர்களுக்கான ரயில்கள் ரத்து: ரயில்வே குற்றச்சாட்டு

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க இயக்கப்பட்டு வரும் ரயில்களில் மாநில அரசுகளால் இதுவரை 256 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே குற்றம்சாட்டியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :3 ஜூன் 2020, 11:00 am

PTI


புது தில்லி: புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க இயக்கப்பட்டு வரும் ரயில்களில் மாநில அரசுகளால் இதுவரை 256 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே குற்றம்சாட்டியுள்ளது.

மே 1-ம் தேதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை நாட்டில் 4,040 புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. ஆனால், மாநில அரசுகள் அனுமதிக்காததால் 256 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதில், மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் மாநிலங்களே முதல் இடத்தில் உள்ளன.

அதாவது மகாராஷ்டிரத்தில் 105 ரயில்களும், குஜராத்தில் 47 ரயில்களும், கர்நாடகத்தில் 38 ரயில்களும், உத்தரப்பிரதேசத்தில் 30 ரயில்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் 10 ரயில்கள் மட்டுமே இயக்க திட்டமிடப்பட்ட பட்டியலில் உள்ளன என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.