மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பூங்காக்களுக்குச் செல்ல முதியவர்களுக்கு தனிநேரம்: புவனேஸ்வர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

புவனேஸ்வரில் பூங்காக்களுக்குச் செல்ல முதியவர்களுக்கு தனிநேரம் ஒதுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :4 ஜூன் 2020, 7:55 am

DIN

புவனேஸ்வரில் பூங்காக்களுக்குச் செல்ல முதியவர்களுக்கு தனிநேரம் ஒதுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் குறித்து மாநில அரசு அறிவித்து வரும் நிலையில், ஒடிசாவில் வார நாள்களில் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதியவர்களுக்கு கரோனா தொற்று எளிதாகப் பரவும் என்பதால் அவர்களை நோய்த் தொற்றில் இருந்து காக்கும்பொருட்டு 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பூங்காக்களில் அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை மூத்த குடிமக்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கால இடைவெளியில் மற்ற வயதினர் செல்ல தடை விதிக்கப்படுகிறது. 

மேலும், திங்கள் முதல் வெள்ளி வரை, வார நாள்களில் பூங்காக்கள் காலை 5 மணி முதல் காலை 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும் என்றும் பூங்காவிற்கு வரும் நபர்கள் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேலும் 90 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து,  மொத்த பாதிப்பு 2,478 ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.