டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 1.25 லட்சம் பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 1,25,000 பேர் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :6 ஜூன் 2020, 10:14 am

DIN

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 1,25,000 பேர் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏற்றிச் செல்ல வடகிழக்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றது.

இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதுவரை இயக்கப்பட்ட 80-க்கும் மேற்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டதாக என்.எப்.ஆர் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் சுபனன் சந்தா தெரிவித்துள்ளார். 

மேலும், நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும், 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மேலும் 13,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் விரைவில் அனுப்பப்படுவார்கள் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.